மேனன் முதல் அமைச்சர் கருணாநிதி ஈழத் தமிழர் பற்றி கலந்தாலோசனை

ஈழத் தமிழ் மக்கள் விவகாரம் பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் ஆலோசனை நடாத்தியுள்ளதாக இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

இன்று இவ் சந்திப்பு இடம் பெற்றுள்ளமாகவும் மேனன் தனது பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் மேற்கொண்ட முதல் சந்திப்பு இது என தெரிவித்துள்ள இந்து சந்திப்பின் பின்னர் மேனன் பத்திரிகையாளருக்கு கருத்து வெளியிடுகையில் தாம் தமிழ் மக்கள் பிரச்சினை பற்றி சிறீலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும்.இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றம் மீள் கட்டுமானம் என்பனவற்றுடன் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய அதிகார பரவலாக்கல் என்பன உள்ளடங்கலாக தமது வேலைத் திட்டம் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதன் போது முதலமைச்சர் இந்திய மீனவர்களின் நிலைமை மற்றும் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நிலை பற்றி கரிசணை வெளியிட்டதாகவும் இதற்று தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வோம் என மேனன் உறுதி அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரை சிறீலங்கா உச்சக்கட்டமாக மேற்கொண்டு இருக்கையில் சிறீலங்காவிற்கு ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதில் முன்னின்று உழைத்தவர்களில் நாராயணனுக்கு அடுத்த படியாக மேனன் தமிழ் மக்களால் பார்க்கப்படுவது அனைவரும் அறிந்தது.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.