அன்பான தமிழ் உறவுகளுக்கு……

எமது இணையத்தளம் சில விசமிகளின் செயல்ப்பாடுகளால் கடந்த சில வாரங்களாக தடைப்பட்டு இருந்ததென்பதினை உங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இதை நிவர்த்தி செய்வதற்க்காக மிகவும் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீண்டும் இன்றில் இருந்து எமது இணையத்தளம் செயற்ப்பட ஆரம்பித்துள்ளதென்பதை அறியப்படுத்துவதுடன், புலம்பெயர் தமிழீழ மக்களுக்கும், தாயகத்தில் விடுதலை வேண்டி நிற்க்கும் தமிழீழ மக்களுக்கும், தமிழ் நாட்டு தமிழக உறவுகளுக்கும் நெருடல் இணையம் இன்றய நாளில் மிகவும் முக்கிய செய்தி ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றது.

உங்களது தாயகம் நோக்கிய பயணத்தை மன சோர்வின்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றது. காலம் கனிந்து வரும் போது நெருடலின் இந்தக் கூற்று சரியான பதிலை அளிக்குமென்று எதிர்வு கூறுகின்றது.

தலைவர் மேதகு. வே. பிரபாகரனையும், தமிழீழ புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும், ஏனய படையணி தளபதிகள், நிர்வாகிகளையும், அனைத்துலகத்தின் தொடர்பக பொறுப்பாளர் காஸ்ட்ரோ அவர்களது நிர்வாகத்தினையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டு, எமது தலைவர் அவர்களின் சிந்தனையின் படி தமிழீழ தனியரசு நோக்கி நகரும் படி நெருடல் இணயம் அனைத்து தமிழ் மக்களையும் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றது.

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள நெருடலுடன் இணைந்திருங்கள்.

நன்றி
நெருடல் குழுமம்

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

18 Comments on “அன்பான தமிழ் உறவுகளுக்கு……”

  • kiri wrote on 27 February, 2010, 4:43

    மீழ் வரவுக்கு நன்றி

  • AmalRaj wrote on 27 February, 2010, 4:53

    உங்கள் கருத்து மிகவும் சரியானது உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • Neruppu wrote on 27 February, 2010, 7:33

    நெருடல் ஊடக குழுமத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள். கருத்துப்பகுதிகள், ஒரு புளொக் இணையத்தளத்தின் வலுவாக காக்கப்பட வேண்டிய விடயம். இதட்குள்ளால் தான் ஹக் பண்ண bots வைத்திருக்கிறார்கள். ………….

    இப்போது, 9 கோடி தமிழர் எல்லோரும் ஒன்று சேர்ந்து மற்றைய 700 கோடி மனிதருக்கு தமிழர் இன அழிப்பை பற்றி கூறினாலே போதும். இரண்டு இலட்சம் மக்களின் உயிர், புலி ஆராய்ச்சியிலும் பார்க்க முக்கியமானது. சிங்களவன் திசை திருப்ப வருடத்திற்கு 600 மில்லியன் ரூபாக்களை செலவழிக்கிறான்.

    மற்றும், மேலுள்ள அருமையான படத்தை வரைந்தவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது உலக அரசியல் நிலவரத்திட்கேட்ப அழகாக தமிழீழத்தின் கருவை படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

  • arasu wrote on 27 February, 2010, 7:39

    மீண்டும் பார்க்கும்போது Magizhtchi

  • ,Rajan.Rajjamani wrote on 27 February, 2010, 8:19

    நல்வரவு ஆகுக

  • Vidhya wrote on 27 February, 2010, 10:24

    நன்றி. உங்கள் கருத்து மிக விரைவில் வெற்றி பெரும்.

    நம்பிக்கையுடன்,
    வித்யா

  • Babu Natesan wrote on 27 February, 2010, 10:30

    எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சாதனை படைப்பது தான் தமிழனின் தனி பண்பாடு. தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் இழிவை ஏற்படுத்துபவனுக்கு காலம் பதில் சொல்லும். மீண்டும் தலைநிமிர்ந்த நெருடலுக்கு தமிழனின் வாழ்த்துக்கள்

  • thellamizhdhu wrote on 27 February, 2010, 11:53

    ஓகே தேங்க்ஸ்

  • Soorya wrote on 27 February, 2010, 16:49

    உங்கள் இணையத்தளத்தைத் தாக்கும் விசமிகளுக்கு எதிராக சட்ட நடபடிக்கை எடுக்க முடியாதா? தமிழீழத் தாயகம் நோக்கிய உங்கள் பாதையில் நாமும் ஒன்றாய் பயணிப்போம்.

  • karuppu wrote on 27 February, 2010, 18:02

    நல்வரவு ஆகுக

  • karuppu wrote on 27 February, 2010, 18:07

    நெருடலை மீண்டும் படிப்பதில் எல்லை இல்லா மகிழ்ச்சி……………………….

  • tamilselvan wrote on 27 February, 2010, 19:39

    வருக வருக வாழ்த்துக்கள் உலக தமிழர் அனைவரின் தாகம் தமிழ் ஈழமென முழங்கு சங்கே முழங்கு ! அன்புடன் தமிழ்செல்வன் தஞ்சையில் இருந்து 

  • sri wrote on 27 February, 2010, 21:37

    நன்றி

  • vass miller wrote on 27 February, 2010, 21:47

    லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொன்னிங்கள்,
    கட்டாயம் ஈழம் மீட்போம் இது உறுதி ,.

    தாங்களின் மீட்சிக்கு வாழ்த்துக்கள்,,,.

    வாஸ் மில்லர் …………..

  • tamilan wrote on 28 February, 2010, 1:52

    அப்பாடா…….
    விஷமிகளை எதிர்த்து வென்றதற்கு வாழ்த்துக்கள்…..

  • varathan wrote on 28 February, 2010, 3:47

    வாழ்த்துக்கள் உலக தமிழர் அனைவரின் தாகம் தமிழ் ஈழமென முழங்கு சங்கே முழங்கு ! அன்புடன் வரதன்

  • ambalavanan wrote on 1 March, 2010, 22:15

    தமிழகத்தில் வாழக்கூடிய தஞ்சை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் உலகமெங்கும்
    வாழுகின்றத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன் .துரோகிகளை நம் அருகிலேயே
    வைத்துக் கொள்வோம் .தவறு செய்ய விடாமல் நமது கண்காணிப்பில் , நமது ஆதரவில் , நண்பர்கள் என்றும் கொண்ட கொள்கையில் எங்கு இருப்பினும் மாறாது இருப்பவர்கள். நண்பர்கள் குறையலாம் துரோகிகள்
    அதிகமாக விட வேண்டாம் . வெற்றி உறுதி .முதலில் நம் துரோகிகளை அறிவால் வெல்வோம் ..
    ஈழம் பெறுவது என்பது உண்மையாகும் நம் வாழ நாளிலயே ‘

  • arutkaiyan wrote on 4 March, 2010, 15:17

    அன்பு உறவே நெருடல் தடைகளை தாண்டியமைக்கு மகிழ்ச்சி.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.