பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
- இவ் விடயம் 03. 03. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 22:08க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு பொன்சேகாவினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


