கரும்புலி மாவீரர்கள்; எமை காக்க தம்மை நெருப்பாக்கியவர்கள்
- இவ் விடயம் 11. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 17:14க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்

ஈழத்தின் வெங்கொடுமை தனைபோக்க
வெங்குருதி தனிற்கமழ்ந்தாய்
தாங்கொண்ணா பெரும்துயர் அதைத்துடைக்க
நீங்காநெடுந் துயில்தனை நீ மணந்தாய்
இனிவரும் தலைமுறை சுதந்திரமாய் பிறக்க
அஞ்சா நெஞ்சுடன் சாகத் துணிந்தாய்
உன்னுயிர் தந்தாய் தமிழீழம் காக்க
இன்றெங்கள் நெஞ்சில் வித்தாகிப் போனாய்
வசந்தன் வந்தார் முதலில் வாகை மலர்ச் சூடி
இன்றும் வீறுநடை போடுகிறது போர்க்களம் நாடி
புறநானூற்றுத் தாயின் வீரம் பயின்ற கண்ணி -எங்கள்
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த அங்கயற்கன்னி
விந்தை உரைத்திட்டோம் உலகிற்கே
கரும்புலிப்படை ஒன்றைப் படைத்திட்டே – இப்படை
உயிரில் தீ மூட்டி உடலை வெடியாக்கும்
எவன்வரினும் எதிர்த்து வேரறுக்கும்
எம் வீரர்கள் தருவது தம் உயிரை கொடை
தென்றலாய் பிறந்து புலியாய் மாறிட்டோம்
பகைதனை விரட்ட எரிமலையாய் வெடித்திட்டோம்
எந்தைத்தாய் வாழ்ந்திட்ட எம்நிலம் மீட்க
புயலென மாறி கரும்புலியாய் புறப்பட்டோம்
இனமது வளர மொழியது வளரும்
இனமே போனால் மொழியெங்கே வாழும்
தமிழீழம் மலர படைகொண்டு நின்றோம்
தமிழுக்குத் தலைமகனாய் பிரபாகரனை தந்தோம்
மேகம் மறைக்கலாம் நீலச் சுடர்மணி வானம்
புலியை மறைக்குமோ சிறுச் சிங்களக் காகம்
வெற்றி நமதே இனி ஒவ்வொரு நாளும் – என
தமிழீழ மரஞ்செடியும் சுதந்திரப்பண் பாடும்
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “கரும்புலி மாவீரர்கள்; எமை காக்க தம்மை நெருப்பாக்கியவர்கள்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!




we need you .you are the only people give everything in return.