Archive for the ‘நேர்காணல்’ Category

பக்கம் 1, மொத்தம் 2 பக்கங்கள்12

நாடுகடந்த அரசின் இடைக்கால இயக்குனர் திரு.உருத்திரகுமாருடன் ஒரு நேர்காணல்

alt text
இலங்கை தமிழ் சங்கம் வெளியிட இருக்கும் சங்கம் வருடாந்த இதழுக்காக தமிழீழ நாடு கடந்த அரசின் இயக்குனர் திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல். சங்கம் வருடாந்த இதழ் வருகின்ற ஜூன் மாதம் 6ம் நாள் New Jerseyயில் வெளியிடப்படுகின்றது. திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல் புலம்பெயர் தமிழீழத்திற்க்காக நெருடல் மூலம் பிரசுரிக்கப்படுகின்றது. மேலும்...

ஆயுதப் போராட்டம் என்பதோ… வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது – வி. ருத்ரகுமாரன்

alt text
ஆயுதப் போராட்டம் என்பதோ... வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது. ஈழத் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளின் சட்ட திட்டத்தை மதித்து செயல்படுவோம். சட்டவிரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.'' இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி இந்திய வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் இதழுக்கு விசுவநாதன் ருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். மேலும்...

தமிழர் கோரிக்கைகளை மௌனித்துப் போகச் செய்ய இயலாது – சுரேஸ் பிறேமசந்திரன்

alt text
13ஆவது திருத்தச் சட்டம் ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிக்கும் தன்மை கொண்டது. பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் தமிழர் கோரிக்கைகளை மௌனித்துப் போகச் செய்ய இயலாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்...

கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்

alt text
கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது. காரணம், இவையும் போர் குற்றங்களுடன் இணைக்கப்படும் ஐயம் அரசுக்கு உள்ளது என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி கிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும்...

எமது தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அரசியல் அதிகாரம் எம்மிடமே இருக்கவேண்டும் – பொ. ஐங்கரநேசன்

alt text
நல்லது நடக்கும் என்று கடைசிவரையில் முள்ளிவாய்க்காலில் காத்திருந்து கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளை யார் மறப்பார்கள்? அவர்களது கனவுகளை  யார் தகர்ப்பார்கள்? தமிழ்மக்கள் எல்லோருடைய மனதிலும் தமிழ்த்தேசியம் என்பது ஒரு மந்திரச் சொல்லாகவே பதிந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் வாக்களித்து, வாக்களிக்கும் விழுக்காடு உயருமாக  இருந்தால் தமிழத்தேசியக் கூட்டமைப்பு அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றும் என்பது உறுதியென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும்  சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும்...

இத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு அம்மாவாகலாம்; என் தலைவன் எனக்கு அண்ணனாகக் கூடாதா? சீமானுடன் ஒரு நேர்காணல்

alt text
வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன 'நாம் தமிழர்' இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 'பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்' என கனடா அரசு குற்றம்சாட்ட... இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம். மேலும்...

ஜனாதிபதி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா முதலாவது செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம்

alt text
நான் ஜனாதிபதியானதும் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். 17 ஆவது திருத்தச் சட்டம் அல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்று அரசியலமைப்பினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர்  சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும்...

தனித்தமிழீழத்தை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே தேசியத்தலைவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்

alt text
தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள். மேலும்...

வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…

alt text
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேலும்...

ஒரு நேரடி சாட்சி: போரினால் துரத்தப்பட்ட வன்னி மக்களின் மீள்குடியமர்வு

alt text
மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.   வெளியாட்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிக மிகக் கடினம். வவுனியாவில் உள்ள "மெனிக் பாம்" (மாணிக்கம் பண்ணை) முகாம்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 2 பக்கங்கள்12
Copyright © 2010 நெருடல். All rights reserved.