Archive for the ‘கட்டுரைகள்’ Category

பக்கம் 56, மொத்தம் 58 பக்கங்கள்« முதல்பக்கம்...1020305455565758

பெண் போராளியின் கண்ணீர் புரட்சி மடல்

alt text
அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..... இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2008. மேலும்...

மீண்டுமொருமுறை கால்பதிக்க காத்திருக்கிறதா இந்தியா?

alt text
விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி அண்மையில் வெளியிட்ட கருத்தொன்று, தமிழ் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படத்தக்கது.அதாவது, உலகெங்கும் வாழ்கின்ற மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசிப்பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும் என்று யோகி கூறியுள்ளார்.மக்களை அணிதிரட்டும், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடும் இதுவாகவே இருக்க முடியும். மேலும்...

உலகத் தமிழர்களே ஒரு நிமிடம்! இயன்றதைச் செய்வோம். இன்றே செய்வோம்

alt text
உலகத் தமிழர்களது வரலாற்றில் மிகவும் கடினமான துயரங்கள் தோய்ந்த இரத்தத்தில் நனைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஈழத்திலே அப்பாவித் தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ஆட்டிலெறித் தாக்குதல் களிலும் வான் குண்டுத் தாக்குதல்களிலும் தின மும் பலர் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்படுகிறார்கள். மேலும்...

தமிழீழ தமிழர்களை காப்பாற்றுங்கள், தீயில் வெந்து உயிர் தருகின்றோம் பாயில் சாய்ந்தது போதும் பாரில் போர் செய்து வெல்லுங்கள்

alt text
உலகமே ஈழத் தமிழரின் உயிரைக் காப்பாற்று! ஈழத் தமிழனின் நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்! என்ற வேண்டுகோளை முன்வைத்து உயிரைக் கொடுத்துத் தமிழினம் போராடுகின்றது. மேலும்...

இஸ்ரேல் கற்றுத்தரும் பாடம்

alt text
அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து,இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது. மேலும்...

அடிபட்டவன் சும்மா விடுவானா?

alt text
இலங்கை இராணுவத்தால் கொடூரமான‌ இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற‌ அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. மேலும்...

வட்டியுடன் மீளளிப்பு செய்யப்படவேண்டிய ஒத்தி வைக்க முடியாத காலப்பணிஎம் கண்முன்னே விரிகின்றது

alt text
வணக்கம்!எமதான உறவுகளே உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது கையறு நிலை என்பது இதுதானோ?உலகம் பூராவும் எழுச்சி ஊர்வலங்கள்,உணர்ச்சி கொந்தளிப்பின் அதி உச்ச வெளிப்பாடாக உயிர்த்தியாகம் வார்த்தைக்களிற்கு அப்பாற்பட்ட தாயகத்தில் எம் இனம் படும் இனப்படுகொலையின் அதி உச்ச அவலம்,இவ்வளவையும் நிச்சயமாக எமதான உறவுகளால் சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துரைதுள்ளோம்,ஆயினும் சர்வதேசம் எந்த ஓரு ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க(முடிய)வில்லை. மேலும்...

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச சமூகம் வகிக்கும் பாத்திரங்களும்

alt text
இக்கட்டுரை தமிழ்நேசன் இணையத்தளத்தில் திரு. நடேசன் சத்தியேந்தரா அவர்களால் எழுதப்பட்ட The Jeff and Mutt Act என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.இன்றைய நிலையில் சோர்வடைந்து விடாமல் தெளிவுடன் இயங்க இவை போன்ற வாசிப்பு அவசியமாகும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்காளிகளாகச் செயல்படுவோருக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் ஆதர்சத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெவ் (Jeff) மற் (Mutt) (நல்ல பொலிசும் கெட்ட பொலிசும்) இவர்களின் செயல்பாடுகளும். மேலும்...

இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?

alt text
இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி உலகத்தின் ஒரு மூலையில் வாழ வழியின்றி எதிரியின் ஷெல்கள் பட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும்...

உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!”

alt text
”புலிகளுக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்பட்டால், சிங்கள ராணுவத்துக்குப் பேயடி கொடுக்க நினைக்கும் தன் மகன் சார்லஸ் ஆண்டனிக்கு பிரபாகரன் அனுமதி வழங்குவார். அதனால் இன்றைக்கு சிங்கள ராணுவம் மட்டுமல்லாது உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!” -கடந்த 28.01.09 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘பதுங்குவதா, பாய்வதா… மகனோடு புலித்தலைவரின் பாசப் போராட்டம்!’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரியின் இறுதி வரிகள் இவை. மேலும்...
பக்கம் 56, மொத்தம் 58 பக்கங்கள்« முதல்பக்கம்...1020305455565758
Copyright © 2010 நெருடல். All rights reserved.