இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும்...தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும்...விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்...முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்...வன்னிக் களமுனையில் இன்று அதிகாலை முதல் மூண்டுள்ள மோதல்களால் வன்னிப்பகுதி பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும்...விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று மாலை படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...இன்றைய தேர்தலுக்கு பின் 'Bloodbath' மிகப் பெரிய பேரவல வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதென பொதுவான பயம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பாதுகாப்புச்சபை உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என உலக மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. இதே நேரம் இலங்கையிலிருந்து வரும் செய்திகளிலிருந்து இந்திய தேர்த்தல் முடிவு வெளிவர முன்னர் விரைந்து போரை முன்னெடுத்து அடுத்த 48 மணித்தியாலத்தினுள் பாதுகாப்பு வலயத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர இலங்கையும் முடிவெடுத்துள்ளதாம்.
மேலும்...அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது.
மேலும்...ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு ...
மேலும்...வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்து இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர்.
மேலும்...