Archive for the ‘செய்திகள்’ Category

பக்கம் 1, மொத்தம் 315 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

பிரித்தானியாவுடன் தொடரும் சிறிலங்காவின் போர்

alt text
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி Sir Peter Ricketts வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகாமவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் நிரந்திர செயலாளரான Sir Peter Ricketts  சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகாமவை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். மேலும்...

ஜே.வி.பியை 1989 ஆம் ஆண்டு அழித்தவர் பொன்சேகாவே என்பதை அந்த கட்சி மறந்துவிடக்கூடாது: விமல் வீரவன்சா

alt text
ஜே.வி.பியை 1989 களில் அழித்ததில் ஜெனரல் பொன்சேகாவுக்கும் தொடர்புகள் உண்டு என்பதை ஜே.வி.பி மறந்துவிடக்கூடாது என ஜாதிக நிடகாஸ் பெரமுனை கட்சியின் தலைவர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மேலும்...

தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் – கவிஞர் சேரன்

alt text
தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். மேலும்...

போர் முடிந்த நிலையில் புதிய தடுப்பு முகாம்கள்! ஏன்? எதற்காக? – ஜே.வி.பி

alt text
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தடுப்பு முகாம்கள் அமைப்பது குறித்து சிறிலங்காவின் வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இக்கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும்...

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி. மேலும்...

முன்னாள் இராணுவ தளபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்கிறார் அனோமா

alt text
ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்குகின்ற பொழுது அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களை சிறை வைக்கும் ஆபத்தானதோர் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களுக்கு கணவர்களையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும் பலி கொடுக்கும் காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தெரிவித்தார். மேலும்...

யுத்தம் நிறைவடைந்து விட்டது எதற்கு அவசரகாலச்சட்டம்: ஜே.வி.பி கேள்வி

alt text
யுத்தம் நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணம் என்னவென ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் ஹந்துன்நெத்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும்...

பல ஆயிரக்கணக்கான பெண்கள் போரில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்: பத்மினி சிதம்பரநாதன்

alt text
கடந்தகாலப் போரில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். பன்நாட்டு பெண்கள் நாளான நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்ததன் விளைவாகவே பன்நாட்டு பெண்கள் ஒன்று திரண்டு மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடினார்கள். மேலும்...

தமிழ்க் கட்சிகளுக்குள் புரிந்துணர்வு ஏற்பட்டால் அரசியல் தீர்வுக்கு உதவமுடியும் – நிருபாமா ராவ்

alt text
இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தமிழ்க் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவொரு விதத்தில் உதவமுடியும் என்றும் எடுத்துக் கூறினார்.  மேலும்...

தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது – சிறிலங்கா அமைச்சர்

alt text
மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் குறித்து இன்று பேசுகின்றோம். ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் தான் எமக்கு அதிகமான அழுத்தங்கள் வந்தன. ஆனால் முதல்வர் தலைமையிலான தமிழகமும் இந்தியாவும் எம்முடன் இருக்கின்றன என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேலும்...
பக்கம் 1, மொத்தம் 315 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.