Archive for the ‘விசேட செய்தி’ Category

பக்கம் 1, மொத்தம் 63 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »

தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை விரும்பாத அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராகிறது?

alt text
போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்து பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் போருக்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. மேலும்...

புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? – தாயகத்தில் இருந்து ஒரு குரல்

alt text
இப்பொழுது எனது கவலையெல்லாம் என்னவென்றால் புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதே. தமிழ் மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, இதற்கும் மேலாக கே. பியின் தலைமையிலான ஒரு குழு இன்னும் என்னென்னவோ பெயர்களில் புலத்தில் உள்ள தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது!

alt text
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். மேலும்...

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவரும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைப்பார்களா?

alt text
கடந்த ஆண்டு மே-19ம் திகதியுடன் தமிழ்மக்களது பாதுகாப்பு கவசமாக விளங்கிய ஆயுதங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்ய முடிவெடுத்தமையும் அதன் பின்னர் இன்றுவரை ஓய்வின்றி மக்களை குளப்பும் வகையிலான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது எமது இனத்தின் தூர்பாக்கியமாகும். மேலும்...

வன்னி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு!

alt text
வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம். மேலும்...

மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாமாவுக்கான தமிழர்கள்!

alt text
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது. மேலும்...

தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!

alt text
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும்...

தமிழீழ தேசத்தை காலால் மிரித்து; ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் வீடு!! – ஆடு தம்பி ஆடு; அடக்குகிறவன் எழும் வரை!!!

alt text
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!

alt text
வன்னிப் போரின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை காலதாமதம் இன்றி நேர்மையுடன் முன்னெடுக்க வேண்டுகின்றோம்.போரின் இறுதி நாட்களில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய 'போர்க்கைதிகள்' என்ற வரையறைக்குள் பராமரிக்கவும், அதற்குள்ளான உரிமைகளை வழங்கவும் வேண்டுகின்றோம். மேலும்...

பரிவாரங்களுடன் ஐ.நா செல்கிறார் மகிந்தா: போர்க்குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தயாராகின்றது தமிழ் சமூகம்

alt text
எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மேலும்...
பக்கம் 1, மொத்தம் 63 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.