27ம் திகிதி சனிக்கிழமை பி.பகல் 15.00 மணிக்கு பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்லின மக்களும், அரசஅரசசார்பற்ற அமைப்புக்களும் ஒன்றிணைந்து காலனித்துவ ஆட்சிக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், ஒன்றுகூடலும் இடம்பெற்றிருந்தது.
மேலும்...
டென்மார்க்கில் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள்வாக்கெடுப்பு: இன்று 32 நகரங்களில் நடைபெறுகின்றது.
மேலும்...
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் 27 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஓவியக் கண்காட்சி Temple Bar காட்சிக் கூடத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மேலும்...
ஈழத்தமிழினமே அன்னை மண் உலகம் இரண்டிலும் இனிநாங்கள் முன்னைவிட ஆயிரம் மூச்சோடு தலைநிமிர்வோம் ஈழ விடுதலைப்போர் தொடுப்போம் தொடர்வோம் சுதந்திரதாகம் என்று பிரான்சு பாரிசு புறநகர் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 16.00 தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில்அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வும் சுதந்திரதாகம் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனியின் டோட்மூன் ,நூறன்பேர்க்க நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மேலும்...
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்புக்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் இல.5011 Buchan மொன்றியலில் அமைந்துள்ள EVEAGREEN மண்டபத்தில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது.
மேலும்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மேலும்...
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது.
எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது.
மேலும்...
தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன.
மேலும்...
விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது மூதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக ,ஒரு தத்துவாசிரியாக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத்தலைவரின் உற்ற நண்பனாக இருந்து ஊக்கமும், உத்வேகமும் அளித்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது.
மேலும்...